Tamilnadu
தேனி அருகே காவலர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி சுட்டுபிடிப்பு : காவல்துறையினர் அதிரடி !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாவார்பட்டியில் முத்துக்குமார் என்ற காவலர் என்பவர் நேற்று முன்தினம் கஞ்சா வழக்கில் தொடர்புடைய சிலரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக - கேரள எல்லைப் பகுதியான கம்பம் அருகே உள்ள கம்பம் மெட்டு மலைச் சாலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பொன் வண்ணன் பதுங்கியிருந்துள்ளார்.
அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, அவர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றுள்ளார். இதன் காரணமாக தற்காப்புக்காக போலிஸார் நடத்திய தாக்குதலில் பொன் வண்ணன் மீது குண்டு பாய்ந்ததில் அவர் காயமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!