Tamilnadu
”எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
”அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு,” எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மக்கள் தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இதுவரை 2700க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரத்தை தாண்டும். ஆகம விதிகளின் படியே கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருந்ததா? யார் அமைச்சர்? என்ற கேள்வி இருந்தது. ஆனால் இப்போது எப்படி இல்லை. மக்களுக்கு அறநிலையத்துறையை பற்றி நன்றாகவே தெரிகிறது.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. எதிர்பாராத நடக்கும் குற்றங்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!