Tamilnadu
”எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
”அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு,” எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மக்கள் தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இதுவரை 2700க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரத்தை தாண்டும். ஆகம விதிகளின் படியே கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருந்ததா? யார் அமைச்சர்? என்ற கேள்வி இருந்தது. ஆனால் இப்போது எப்படி இல்லை. மக்களுக்கு அறநிலையத்துறையை பற்றி நன்றாகவே தெரிகிறது.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. எதிர்பாராத நடக்கும் குற்றங்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!