Tamilnadu
”எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
”அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு,” எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மக்கள் தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இதுவரை 2700க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரத்தை தாண்டும். ஆகம விதிகளின் படியே கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருந்ததா? யார் அமைச்சர்? என்ற கேள்வி இருந்தது. ஆனால் இப்போது எப்படி இல்லை. மக்களுக்கு அறநிலையத்துறையை பற்றி நன்றாகவே தெரிகிறது.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. எதிர்பாராத நடக்கும் குற்றங்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!