Tamilnadu
”எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
”அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு,” எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மக்கள் தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இதுவரை 2700க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரத்தை தாண்டும். ஆகம விதிகளின் படியே கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருந்ததா? யார் அமைச்சர்? என்ற கேள்வி இருந்தது. ஆனால் இப்போது எப்படி இல்லை. மக்களுக்கு அறநிலையத்துறையை பற்றி நன்றாகவே தெரிகிறது.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. எதிர்பாராத நடக்கும் குற்றங்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!