Tamilnadu
”சென்னையில் 12 துணை மின் நிலையம் அமைக்கப்படும்” : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்படி கல்வராயன் மலை வட்டாரத்தில் அமைந்துள்ள வெள்ளிமலையில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமான என சங்காரபுரம் உறுப்பினர் உதயசூரியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,”கள்ளக்குறிச்சியில் 4 துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சியில் 1371 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிமலையில் துணை மின் நிலையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் சென்னையில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 12 துணை மின் நிலையம் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!