Tamilnadu
ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு: ஆளுநரின் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் சம்மன்!
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக 33 பேரிடம், 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் திவாரி, ராஜேந்திர பாலாஜி மீதான குற்றப்பத்திரிகை நவம்பர் மாதமே தயாராகிவிட்டதாக கூறினார். ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநருக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி கோப்புகள் அனுப்பபட்டதாகவும், ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரிய விவகாரத்தில் முடிவு எடுக்க தாமதம் ஏன்? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!