Tamilnadu
கச்சத்தீவு பற்றி நீங்கள் பேசாதீர்கள் : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!
”மீனவர்களை சந்திப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிமை இல்லை என்றாலும் வழிப்போக்கர்கள் கூறுவது போன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,” ஒரு பிரச்சனை குறித்து முதலமைச்சரிடமோ அல்லது தலைமைச் செயலாளரிடமோ ஆலோசனை நடத்தாமல் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அவருக்கு ஆளுநர் பணி முடிவடைந்து, பணி நீட்டிப்பான லீவ் ப்ளேஸில் இருந்து வருகிறார். இதனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து தமிழ்நாட்டில் பிரச்சனை இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அப்படி பிரச்சனைகள் இருந்தால் அதை ஆளுநர் கூறினால் தமிழ்நாட்டு மக்களும் தெரிந்து கொள்வார்கள்தானே.
இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் இந்தியாவை பெருமையாக நினைத்தது. ஆனால் தற்போது வெளியுறவு கொள்கையில் இந்திய அரசு வெற்றி அடையவில்லை என்றாலும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனால்தான் இந்திய அரசு மீனவர்கள் கைது விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கப்பற்படையை அனுப்பாமலும் அண்டை நாடான இலங்கையை கட்டுப்படுத்த முடியாத சூழலில் உள்ளது.
மீனவர்களை சந்திப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிமை இல்லை என்றாலும் வழிப்போக்கர்கள் கூறுவது போன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.மக்களுக்கு என்ன செய்யலாம் என ஆளுநர் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுவதே ஆளுநருக்கு வேலையாக உள்ளது. தனது பதவியை நிலை நாட்டுவதற்காகவே இதுபோன்று செயல்படுகிறார் ஆளுநர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!