Tamilnadu
தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்தாலும் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சொல்வது என்ன?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நல்லிகோட்டை கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20, லட்சம் மதிப்பீட்டில். சமுதாயக்கூடம் கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து நல்லிக்கோட்டை கிராமத்தில் சமுதாயக்கூடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்துவைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ”பெண்கள் பயன்பெறும் வகையில் நமது மாவட்டத்தில் விவசாய சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
ஒன்றிய அரசு எவ்வளவுதான் தமிழ்நாட்டை வஞ்சித்தாலும் நமக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. நம்ம பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயிரம் கோடியை கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது.
தமிழ்நாட்டை எவ்வளவுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்தாலும், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக எப்போதும் இருக்கும். இதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!