Tamilnadu
தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்தாலும் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சொல்வது என்ன?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நல்லிகோட்டை கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20, லட்சம் மதிப்பீட்டில். சமுதாயக்கூடம் கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து நல்லிக்கோட்டை கிராமத்தில் சமுதாயக்கூடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்துவைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ”பெண்கள் பயன்பெறும் வகையில் நமது மாவட்டத்தில் விவசாய சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
ஒன்றிய அரசு எவ்வளவுதான் தமிழ்நாட்டை வஞ்சித்தாலும் நமக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. நம்ம பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயிரம் கோடியை கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது.
தமிழ்நாட்டை எவ்வளவுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்தாலும், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக எப்போதும் இருக்கும். இதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!