Tamilnadu
தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்தாலும் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சொல்வது என்ன?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நல்லிகோட்டை கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20, லட்சம் மதிப்பீட்டில். சமுதாயக்கூடம் கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து நல்லிக்கோட்டை கிராமத்தில் சமுதாயக்கூடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்துவைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ”பெண்கள் பயன்பெறும் வகையில் நமது மாவட்டத்தில் விவசாய சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
ஒன்றிய அரசு எவ்வளவுதான் தமிழ்நாட்டை வஞ்சித்தாலும் நமக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. நம்ம பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயிரம் கோடியை கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது.
தமிழ்நாட்டை எவ்வளவுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்தாலும், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக எப்போதும் இருக்கும். இதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!