Tamilnadu
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடம்... முழு விவரம் உள்ளே !
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 1100 காளைகள், 900மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சுற்றுக்கு 50 பேர் என போட்டியில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு தொடங்கியதில் இருந்து காளைகளை வீரர்கள் வீரமுடன் அடக்க, சில காளைகள் யாரிடமும் அகப்படாமல் தப்பின.
பகல் முழுவதும் கலகலப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி (301) முதலிடத்தையும், 15 காளைகள் அடக்கி குன்னத்தூர் அரவிந்த் திவாகர் (139) இரண்டாம் இடத்தையும், 14 காளைகளை அடக்கி திருப்புவனம் முரளிதரன் (228) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
முதலமைச்சர் சார்பாக சிறந்த காளைக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள டிராக்டரும், துணை முதலமைச்சர் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு எட்டு லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றும் பரிசும் வழங்கப்பட்டன. அதே போல இரண்டாம் இடம் பிடிக்கும் சிறந்த காளைக்கும் மாடுபிடி வீரர்க்கும் தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!