Tamilnadu
”நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை” : அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!
தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக்கொண்டு பால் மற்றும் பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக 2024-2025-ல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 30 இலட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து, 18.12.2023 முதல் ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உற்பத்தி ஊக்கத்தொகையாக பிரதம சங்கங்களின் மூலம் நிலுவையின்றி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின்படி நலச்சங்கத்தின் கோரிக்கையின் படியும், மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசு அறிவித்த ரூ.3 ஊக்கத்தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் இந்த பணி ஜனவரி 2025 முதல் வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் மேற்கண்ட நடைமுறை அமுல்படுத்தும் விதமாக அரசு அறிவித்த லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகை மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் வழங்கிய சங்க உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!