Tamilnadu
”ஆயுள், மருத்துவக் காப்பீட்டின் மீதான GST வரியை நீக்குக”: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் MP வலியுறுத்தல்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய நாடாளுமன்றத்தில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் MP வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி திமுக எம்.பி. தயாநிதி மாறன், ”தனி நபர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் . குறைந்தபட்சம் மூத்த குடிமக்கள் மற்றும் தனிநபர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடுகளுக்கு வரிநீக்கம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜிஎஸ்டி குறைப்பினால் பிரீமியம் விகிதங்களில் மாற்றம் ஏற்படும்போது தொடர்புடைய நிறுவனங்கள் அதை நுகர்வோருக்கு முறையாக வழங்குகின்றனவா என்பதை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) உறுதிசெய்யவேண்டும் என்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்குவதன்மூலம் எல்லோருக்கும் சமமான சுகாதார பாதுகாப்பு கிடைக்க அரசு வழிசெய்ய இயலும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!