Tamilnadu
”ஆயுள், மருத்துவக் காப்பீட்டின் மீதான GST வரியை நீக்குக”: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் MP வலியுறுத்தல்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய நாடாளுமன்றத்தில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் MP வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி திமுக எம்.பி. தயாநிதி மாறன், ”தனி நபர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் . குறைந்தபட்சம் மூத்த குடிமக்கள் மற்றும் தனிநபர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடுகளுக்கு வரிநீக்கம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜிஎஸ்டி குறைப்பினால் பிரீமியம் விகிதங்களில் மாற்றம் ஏற்படும்போது தொடர்புடைய நிறுவனங்கள் அதை நுகர்வோருக்கு முறையாக வழங்குகின்றனவா என்பதை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) உறுதிசெய்யவேண்டும் என்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்குவதன்மூலம் எல்லோருக்கும் சமமான சுகாதார பாதுகாப்பு கிடைக்க அரசு வழிசெய்ய இயலும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!