Tamilnadu
கரையை கடக்க தொடங்கியது Fenjal புயல் : சென்னைக்கு அதிகமழை எச்சரிக்கை நீங்கியது!
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபென்சல் புயலாக நேற்று உருவானது. இந்தப் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
அதேபோல், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயல் காரணமாக சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது புயல் மரக்காணம் அருகே கரையை கடக்க தொடங்கிய நிலையில் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் செங்கல்பட்டு, காங்சிபுரம், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!