Tamilnadu
உயர்நீதிமன்ற வளாகத்தில் அர்ஜுன் சம்பத் மகன் கைது! : வெறுப்பு பேச்சு சர்ச்சையானதையடுத்து நடவடிக்கை!
வெறுப்பு பேச்சு பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியை சென்னை உயர்நீதிமன்ற வளாக நுழைவுவாயிலில் கைது செய்ததது தமிழ்நாடு காவல்துறை.
மூத்த இதழியலாளர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் பிணை கேட்டு அவர் தாக்கல் செய்த மனு நேற்று (நவம்பர் 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்புக் கேட்பதாக ஓம்கார் பாலாஜி சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, மன்னிப்புக் கேட்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும் தாமாக மன்னிப்புக் கேட்க விரும்பினால் மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக நீதிபதி கூறினார்.
இதற்கு தாமாக மன்னிப்பு கேட்காத ஓம்கார் பாலாஜி தரப்பில், அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஓம்கார் பாலாஜியின் பேச்சை எழுத்து வடிவமாக சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
மேலும், கால அவகாசம் நிறைவடையும் வரை ஓம்கார் பாலாஜியை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஓம்கார் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, விசாரணைக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை உயர்நீதிமன்ற வளாக நுழைவுவாயிலில் காவல்துறை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜியை காவல்துறையினர் கோவைக்கு அழைத்து சென்றனர்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!