Tamilnadu
சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட விண்ணப்பிக்கலாம்! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை மாநகரின் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தனி நபராகவோ, அல்லது கல்வி சுற்றுலா வர விரும்பும் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மூலம் commcellgcc@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 9445190856 என்ற தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை ரிப்பன் மாளிகையை வெளியிலிருந்து மட்டுமே பார்த்தவர்களுக்கு, அதன் உள் சென்று காண வேண்டும் என்ற நெடுநாள் எண்ணம் நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!