Tamilnadu
காவலர் பரந்தாமன் மறைவு - ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதலமைச்சர் இரங்கல்!
மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக மயிலாடுதுறை மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்துவந்தவர் காவலர் பரந்தாமன்.
இவர் நேற்று (அக்டோபர் 27) பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பெரம்பூர் காவல் சரகம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து முதலமைச்சர், “காவலர் பரந்தாமன் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். காவலர் பரந்தாமன் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
காவலர் பரந்தாமன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!