Tamilnadu
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளும் விடுமுறை... தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இந்த நிலையில், இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது"என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!