Tamilnadu
தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடி : பாதி விலையில் தக்காளி விற்பனை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, அதிகளவில் மழை பெய்து வருவதால், விளைச்சலில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை, உச்சம் தொட்டுள்ளது.
தக்காளி விலை சுமார் ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், விலையேற்றத்தால், மக்கள் அவதியுறுவதை போக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், ஒரு கிலோ தக்காளி, ரூ.32 முதல் ரூ.60 வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்து வகை காய்கறிகளுமே தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில், தக்காளியை பொறுத்தவரையில் வெளிச்சந்தை விற்பனை விட பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!