Tamilnadu
தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடி : பாதி விலையில் தக்காளி விற்பனை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, அதிகளவில் மழை பெய்து வருவதால், விளைச்சலில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை, உச்சம் தொட்டுள்ளது.
தக்காளி விலை சுமார் ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், விலையேற்றத்தால், மக்கள் அவதியுறுவதை போக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், ஒரு கிலோ தக்காளி, ரூ.32 முதல் ரூ.60 வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்து வகை காய்கறிகளுமே தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில், தக்காளியை பொறுத்தவரையில் வெளிச்சந்தை விற்பனை விட பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!