Tamilnadu
சென்னை விமான நிலையத்தில் நின்ற தனியார் சேவை : மக்களுக்கு கை கொடுத்த அரசு பேருந்து!
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை திரும்பியவர்கள் தனியார் வாடகை கார்களை புக் செய்துள்ளனர். ஆனால் புக்கிங் கேன்சல் ஆகியுள்ளது.
இது குறித்து உடனே போக்குவரத்து துறைக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை அடுத்து விமான நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் கோயம்பேடு, பிராட்வே, கிளாம்பாக்கம் மற்றும் பிற பகுதிகளுக்கு இயக்கப்பட்டது.
கொட்டும் மழையில் தனியார் போக்குவரத்து சேவைகள் கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தவர்கள், அரசு பேருந்தை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தனர். பிறகு அரசு பேருந்தில் ஏறி தங்கள் செல்லும் பகுதிக்கு நிம்மதியுடன் சென்றனர்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பெண் பயணி, ”சென்னைக்கு விமானத்தில் வருவதற்கு முன் மழை குறித்த தகவல்களை செய்திகளில் பார்த்தோம். அங்கு வந்த பிறகு வீட்டிற்கு செல்ல வாடகை வாகனங்களை புக் செய்தால் புக்கிங் கேன்சல் ஆகிவிட்டது. பல முறை முயற்சி செய்தும் இதேநிலைதான் தொடர்ந்தது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போது, அரசு பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தை பார்த்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது” கூறியுள்ளார்.
Also Read
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!