Tamilnadu
”ஜல்ஜீவன் திட்டத்திலும் ஒன்றிய அரசு பாரபட்சம்” : அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!
”ஜல்ஜீவன் திட்டத்தில் ஒரு ரூபாய் செலவு என்றால் 25 காசு தான் ஒன்றிய அரசு நமக்குத் தருகிறது. மீதி ரூபாயை தமிழ்நாடு அரசுதான் கொடுக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்திற்கு நிதி கிடைத்தவுடன் 16 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கேன்.என்.நேரு," தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றும்போது 628 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் எடுக்கப்பட்டு 4.28 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளில் 7.25 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஜல்ஜீவன் திட்டத்தில் ஒரு ரூபாய் செலவாகிறது என்றால், அதில் 25 காசுதான் ஒன்றிய அரசு நமக்குத் தருகிறது. மீதியை தமிழ்நாடு அரசுதான் தருகிறது. ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் நிதி கிடைத்தவுடன் கூடுதலான 16 புதிய குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படும்.
மதுரை நகர் பகுதியில் ரூ 1800 கோடி செலவிலும், மதுரை புறநகர் பகுதியில் 3000 கோடி செலவிலும் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துவக்கிவைக்க இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!