Tamilnadu
பண மோசடி வழக்கு : 2 ஆவது முறையாக அ.தி.மு.க நிர்வாகி கைது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரிடம் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 2021 ஆம் ஆண்டு, அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ரவீந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து விஜய நல்லதம்பியை போலிஸார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய நல்லதம்பி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி செயல்பட்டதால், கடந்த செப்டம்பர் 19 ம் தேதி இவருடைய முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் தலைமாறைவானார்.
இந்நிலையில், சிவகாசி அருகே மாரநேரியில் பதுங்கியிருந்த நல்லதம்பியை இன்று மீண்டும் 2வ து முறையாக விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான விஜய நல்லதம்பி அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!
-
“திறக்கப்படாத மேட்டூர் அணையால் வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!” : தவெக அரசுக்கு திமுக கண்டனம்!
-
“டெல்லி சென்று கழக அரசின் சாதனைகளுக்கு Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு” : உதயநிதி ஸ்டாலின் பளார்!