Tamilnadu
பண மோசடி வழக்கு : 2 ஆவது முறையாக அ.தி.மு.க நிர்வாகி கைது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரிடம் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 2021 ஆம் ஆண்டு, அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ரவீந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து விஜய நல்லதம்பியை போலிஸார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய நல்லதம்பி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி செயல்பட்டதால், கடந்த செப்டம்பர் 19 ம் தேதி இவருடைய முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் தலைமாறைவானார்.
இந்நிலையில், சிவகாசி அருகே மாரநேரியில் பதுங்கியிருந்த நல்லதம்பியை இன்று மீண்டும் 2வ து முறையாக விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான விஜய நல்லதம்பி அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!