Tamilnadu
கிண்டியில் நீர்நிலை உருவாக்கினால், வெள்ள பாதிப்பைக் குறைக்கலாம்!: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து!
கிண்டி ரேஸ் கிளப் நிலம் கையகப்படுத்தலுக்கு பிறகு, அங்கு பிரம்மாண்டமான பூங்கா மற்றும் பசுமை வெளி அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அவ்வாணையை அடுத்து, கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் அமைய இருக்கும் பசுமை பூங்காவை, நீர் நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் மற்றும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க இயலும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.
வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை இன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் (upstream) பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியுமா? அல்லது ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்த முடியுமா? என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் ஆதம்பாக்கம் ஏரி மட்டும் இருப்பதாகக் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட தீர்ப்பாயம் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர் நிலையாக மாற்றுவது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரியப்படுத்துமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!