Tamilnadu
கிண்டியில் நீர்நிலை உருவாக்கினால், வெள்ள பாதிப்பைக் குறைக்கலாம்!: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து!
கிண்டி ரேஸ் கிளப் நிலம் கையகப்படுத்தலுக்கு பிறகு, அங்கு பிரம்மாண்டமான பூங்கா மற்றும் பசுமை வெளி அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அவ்வாணையை அடுத்து, கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் அமைய இருக்கும் பசுமை பூங்காவை, நீர் நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் மற்றும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க இயலும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.
வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை இன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் (upstream) பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியுமா? அல்லது ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்த முடியுமா? என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் ஆதம்பாக்கம் ஏரி மட்டும் இருப்பதாகக் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட தீர்ப்பாயம் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர் நிலையாக மாற்றுவது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரியப்படுத்துமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!