Tamilnadu
“வருங்காலங்களிலும் திமுக கூட்டணியில்தான் மதிமுக இருக்கும்” - பழனிசாமிக்கு துரை வைகோ பதிலடி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 81-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அரை கிராம் மதிப்புள்ள தங்க மோதிரத்தை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ பேசியதாவது, “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியப்படாது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பல்வேறு சிக்கல்களை மாநில அரசுக்கு ஏற்படுத்தி வருகிறது. பாஜக ஆளுநர்களை வைத்து பல்வேறு சிக்கல்களை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.
எங்களைக் கூட்டணிக்கு அழைக்க வேண்டுமென்ற ஆசைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. திமுக கூட்டணியில் பிரச்னை வருமா? தலைவர்கள் மாறுவார்களா? என்பது எடப்பாடி பழனிசாமியின் விருப்பம். திமுக - மதிமுக கூட்டணி வருங்காலங்களிலும் எந்த பிரச்னையும் இருக்காது.
திமுக தலைமையிலான நல்ல கூட்டணியில் இருக்கிறோம். விஜய் மாநாட்டுக்கு மதிமுக போக வேண்டிய அவசியம் கிடையாது. பெரியாரை முன்னிறுத்தி செயல்படுவதால் விஜயை சார்ந்தோ அல்லது அவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!