Tamilnadu
கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் : பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குச்சிப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஏரி மண் எடுப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் என்பவருக்கு புகார் வந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து அசோக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் முறையாக பதில் எதுவும் சொல்லாமல் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முருகன் மீது கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் பா.ஜ.க கள்ளக்குறிச்சி மாவட்ட ஓபிசி அணி மாவட்ட துணை தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!