Tamilnadu
கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் : பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குச்சிப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஏரி மண் எடுப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் என்பவருக்கு புகார் வந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து அசோக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் முறையாக பதில் எதுவும் சொல்லாமல் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முருகன் மீது கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் பா.ஜ.க கள்ளக்குறிச்சி மாவட்ட ஓபிசி அணி மாவட்ட துணை தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!