Tamilnadu
சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் கழன்று ஓடிய 3 பெட்டிகள் : மோடி ஆட்சியில் தொடரும் ரயில் விபத்துக்கள் !
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது ரயில் இன்ஜினில் இருந்து மூன்று பெட்டிகள் தனியே கழன்றுள்ளது.
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் துரிதமாக செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பெட்டியை இணைத்தனர். இதனால் 30 நிமிடங்கள் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் ரயில்வே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரம் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது. எனினும் தொடர்ந்து ரயில்கள் இது போன்ற விபத்து நேர்வது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!