Tamilnadu
”42% பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” : அமைச்சர் சி.வெ. கணேசன் பெருமிதம்!
அகில இந்திய கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கலந்தாலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய மைச்சர் சி.வெ கணேசன, ”இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 44.74,682 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள். 27 திட்டங்களை புதிதாக முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். 23,70,288 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 17,29,750 பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை எதுவும் நிற்காது. அவர்களுக்கு சென்று சேரும். புதிதாக பதிவு செய்த . 13.76 லட்சம் தொழிலாளர்களுக்கு பணம் உதவி கொடுத்துள்ளோம்.
இந்தியாவிலேயே 42% பெண்கள் வேலை செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நமது முதலமைச்சர் கொண்டு வந்த பல நல்ல திட்டத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. 1000 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கி தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. மேலும் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!