Tamilnadu
"மாநில அரசுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்" : முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பேச்சு!
சென்னை தரமனியில் தனியார் இதழியல் கல்லூரியில் இந்தியாவில் ”ஒன்றிய - மாநில நிதி உறவுகள் - சவால்களும் முன்னேயுள்ள வழிகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கேரள மாநில முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதையடுத் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ”மாநிலங்கள் தங்களுக்கான உரிமையை பெறுவதற்கு தனித்தனியாக போராட முடியாது. கூட்டாட்சியில் நம்பிக்கை உள்ள மாநில அரசுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து 42% pநிதி பகிர்வை மாநிலங்கள் பெற்று வந்தன. ஆனால் தற்போது அது 32%-மாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய நிதியில் 50% மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்படும் நிதி குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் வஞ்சிக்கப்படும் மாநிலங்கள் ஒன்றிணைந்து 16வது நிதி ஆணையம் முன் குரல் கொடுக்க வேண்டும்" என கூறினார்.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!