Tamilnadu
"மாநில அரசுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்" : முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பேச்சு!
சென்னை தரமனியில் தனியார் இதழியல் கல்லூரியில் இந்தியாவில் ”ஒன்றிய - மாநில நிதி உறவுகள் - சவால்களும் முன்னேயுள்ள வழிகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கேரள மாநில முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதையடுத் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ”மாநிலங்கள் தங்களுக்கான உரிமையை பெறுவதற்கு தனித்தனியாக போராட முடியாது. கூட்டாட்சியில் நம்பிக்கை உள்ள மாநில அரசுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து 42% pநிதி பகிர்வை மாநிலங்கள் பெற்று வந்தன. ஆனால் தற்போது அது 32%-மாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய நிதியில் 50% மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்படும் நிதி குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் வஞ்சிக்கப்படும் மாநிலங்கள் ஒன்றிணைந்து 16வது நிதி ஆணையம் முன் குரல் கொடுக்க வேண்டும்" என கூறினார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!