Tamilnadu
ரூ.3 கோடியில் கைத்தறி உபகரணங்கள் : நெசவாளர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஆர். காந்தி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கைத்தறி மற்றும் துணி நூல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1.ரூ.20 கோடியில் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் (New Handloom Clusters) 2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும்.
2.ரூ.1.50 கோடியில் வேலூர் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் 2 சாயச் சாலைகள் (Dye Houses) அமைக்கப்படும்.
3.ரூ.3 கோடியில் 3,000 கைத்தறி நெசவாளர்களுக்கு தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் (Looms and Accessories) வழங்கப்படும்.
4. தேசிய மற்றும் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகள் நடத்தப்படும். ரூ.2 கோடியில் சென்னைதீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சியும், ரூ.1.20 கோடியில் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய 4 இடங்களில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகளும் நடத்தப்படும்.
5.ரூ.66 இலட்சத்தில் இராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் புதிய கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படும்.
6.தமிழ்நாட்டில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 10% அகவிலைப்படி (D.A) உயர்த்தி வழங்கப்படும் !
7.கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.
8.நெசவாளர்களிடையே பிற மாநில நெசவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.50 லட்சத்தில் விழிப்புணர்வு பயணத்திட்டம் செயல்படுத்தப்படும்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!