Tamilnadu
”உயர் கல்வி வளர்ந்தது திமுக ஆட்சியில் தான்” : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய பள்ளியை திறந்து வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, " காமராஜர் ஆட்சி காலத்தில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு பள்ளி என்று கொண்டு வரப்பட்டது. ஆரம்ப கல்வியை வளர்த்தது காமராஜர் ஆட்சி என்றால் உயர் கல்வியை வளர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில்தான்.
தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே உயர் கல்வி அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. புதுமைப் பெண் திட்டம், நான்முதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என கல்விக்காக நல்ல பல திட்டங்களை திராவிடமாடல் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி