Tamilnadu
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதோடு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மே இரண்டாம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மே இரண்டாம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், குளிர் பிரதேசமான ஊட்டியிலேயே இயல்பைவிட வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஊட்டியில் நேற்று முன்தினம் 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகம் என்றும், இதற்கு முன்னர் 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1951ம் ஆண்டு இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது என்றும், அதன் பின்னர் 73 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் வெப்பம் உச்சத்தை தொட்டிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!