Tamilnadu
”தமிழ்நாட்டை நினைத்துத் தூக்கத்தை தொலைத்துவிட்டார் மோடி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் வடசென்னையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று கொளத்தூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்பகுதியிலிருந்த மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், திமுக ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஒன்றியத்தில் மாற்றத்திற்கான காரணம் உள்ளிட்டவற்றை விளக்கி வாக்கு சேகரிப்பில் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டனர். மேலும் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் வீதி வீதியாகச் சென்று அமைச்சர் சேகர்பாபு பரப்புரையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ” பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும், எந்த வழியில் வந்தாலும், இங்கேயே தங்கி இருந்தாலும் மோடியின் பாட்சா தமிழ்நாட்டில் பலிக்காது. பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை நினைத்து நினைத்து தனது தூக்கத்தை மோடி தொலைத்து விட்டார். இந்த தேர்தலில் மோடியின் பாட்சா பலிக்காது. தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது.
Also Read
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
-
சென்னையில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : 2 அமைச்சர்கள் ஆய்வு!
-
“பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை” : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய்யை பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்க : வைகோ வலியுறுத்தல்!