Tamilnadu
”ஹிட்லர் வரலாறு படித்தால் அதில் தெரிவது மோடி முகம்” : இரா.முத்தரசன் கடும் சாடல்!
சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே "மக்கள் முதலமைச்சர் மனிதநேய திருநாள், தோழமை காக்கும் பண்பாளர் சொன்னதைச் செய்யும் மாண்பாளர்" என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71ஆவது பிறந்தநாள் புகழரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமை தாங்கினார். டி.ஆர்.பாலு எம்பி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம் காதர் மொய்தீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசுகையில், "ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படித்தால் அதில் ஹிட்லரின் முகம் தெரியாது. அதில் தெரிவது மோடியின் முகம். 142 கோடி மக்கள் என் குடும்பம் என தெரிவிக்கும் மோடி, தான் கட்டிய மனைவியோடு சேர்ந்து வாழத் தெரியாத மனிதர் அவர்" என பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், "தமிழ்நாட்டில் பா.ஜ.க பூஜ்ஜியம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியோடு இணைந்து தி.மு.க தலைமையிலான கூட்டணி 40க்கு 40 வெற்றி வாகை சூடி மோடியை வீட்டிற்கு அனுப்பும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!