Tamilnadu
”மாநில மொழிகளில் போட்டி தேர்வுகளை நடத்த வேண்டும்” : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் MP வலியுறுத்தல்!
இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இன்று மக்களவையில் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க வழிவகுக்கும் மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய கதிர் ஆனந்த், "போட்டித் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறையும். தற்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தும் முறை அதிகமாக உள்ளது. இதில் மாற்றம் வேண்டும். மாநில மொழிகளில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
யு.பி.எஸ்.சி, ரயில்வே தேர்வுகளுக்கு போதிய பயிற்சியை இந்திய அரசு வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்குகிறது. நேர்முகத் தேர்வு செல்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்குகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!