Tamilnadu
காந்தியின் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த சபாநாயகர் அப்பாவு!
"இந்திய நாடே ஏற்றுக் கொண்ட மகாத்மா காந்தியின் போராட்டத்தையும், தியாகத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது அது கண்டிக்கத்தக்கது" என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, " விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர் தான் சவாக்கர். இவரை தலைவராக ஏற்றுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை பின்பற்றக்கூடியவராக இருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இவர் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பின் சட்டத்திற்கு எதிராகவே நடந்து கொண்டு வருகிறார். தற்போது இந்திய நாடே ஏற்றுக் கொண்ட மகாத்மா காந்தியின் போராட்டத்தையும், தியாகத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது அது கண்டிக்கத்தக்கது.
காந்தி மிகப்பெரிய ராமர் பக்தர். மேலும் பகவத் கீதையின் படி நடந்து கொள்ளக்கூடியவர். இப்படி ராமர் பக்தராக இருந்த காந்தியை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர். இவர்கள் வழியில் வந்ததால்தான் இன்று காந்தியை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசி இருக்கிறார். எனவே தான் இருக்கும் பதவி என்னவென்று உணர்ந்து அரசியல் அமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மதத்தையடுத்து, இனத்தை குறிவைக்கும் மோடி! : எதிர்க்கட்சிகள் கண்டனம்!
-
ராகுல் காந்தி கேள்விக்கு 24 மணி நேரமாக மவுனம் காப்பது ஏன்? : மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!
-
ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!
-
தடுப்பூசி விவகாரம் - சொந்தநாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்த பா.ஜ.க : அகிலேஷ் குற்றச்சாட்டு!
-
தொடரும் மோசடி - ”நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு” : தி.மு.க MP பி.வில்சன் வலியுறுத்தல்!