Tamilnadu
”முதலில் மக்களை சந்திக்கிறோம்”: தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டத்திற்கு பிறகு கனிமொழி MP பேட்டி!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு, அறிக்கை தயாரிப்புக்குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்துத் தேர்தல் வேலைகளை தி.மு.க தொடங்கி விட்டது.
நேற்று தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து இன்று தேர்தல் தயாரிப்புக்குழு ஆலோசனை நடத்தியது. தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் டி.கே.எஸ். இளங்கோவன, ஏ.கே.எஸ் விஜயன், கோவி செழியன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, கே.ஆர்.என். ராஜேஷ் குமார், எம்.எம்அப்துல்லா, சி.வி.எம்.பி எழிலரசன், எழிலன் நாகநாதன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை இக்குழுவினர் சந்தித்தனர். அப்போது பேசிய கனிமொழி MP," நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு இன்று ஆலோசனை நடத்தியது.
தமிழ்நாடு முழுவதும் சென்று தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகே தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். இதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அதேபோல் தேர்தல் அறிக்கையில் எது முதன்மையாக இருக்கும் என்பதும் அறிக்கைகள் தயார் செய்து முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு தெரிவிக்கப்படும். மேலும் தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டியது இல்லை. கதாநாயகியாகவும் இருக்கலாம்."என தெரிவித்துள்ளார்.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!