Tamilnadu
பாலம் கட்டும் பணியை தடுத்து கொலை மிரட்டல் : பா.ஜ.க ஒன்றிய தலைவர் அதிரடி கைது!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி ஆற்றைக் கடந்து செல்ல பாம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.44 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தாங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறி வருவதைக் கண்கூடாகப் பார்த்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் புதிய பாலம் வருகைக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆத்தூர் ஒன்றிய பா.ஜ.க தலைவர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அய்யனவேல் என்பவர், மக்கள் கோரிக்கைக்குத் தடையாகப் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.
அதோடு, பாலம் கட்டும் ஒப்பந்ததாரருக்குக் கொலை மிரட்டல் விடுத்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து ஒப்பந்ததாரர் திருப்பதி, பா.ஜ.க ஒன்றிய தலைவர் அய்யனவேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அய்யனவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!