Tamilnadu
பல் துலக்கும் போது வாயில் சிக்கிக் கொண்ட Tooth Brush : உரிய நேரத்தில் அகற்றிய அரசு மருத்துவமனை!
நாம் எல்லோரும் காலையில் எழுந்த உடன் பல் துலக்குவோம். அப்படி பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது வாயில் பிரஷ் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருப்போமா?. அப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் tooth brushல் பல் துலக்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென tooth brush வாயின் தசைப் பகுதியில் குத்தி சிக்கிக் கொண்டுள்ளது. அவர் பல முறை முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை.
பிறகு அவரது உறவினர்கள் முயன்றும் வாயிலிருந்து tooth brushயை வெளியே எடுக்க முடியவில்லை. உடனே அவரை கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பல் மருத்துவர்கள் வாயின் தசைப் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி சிறிய அறுவை சிகிச்சை செய்து tooth brushயை வெளியே எடுத்தனர்.
பின்னர்தான் அந்த பெண்ணால் பேச முடிந்தது. இதையடுத்து உரிய நேரத்தில் சிகிச்சை செய்த அரசு மருத்துவர்களுக்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!