Tamilnadu
”அண்ணா பெயரை சொல்லவே அண்ணாமலைக்கு தகுதி இல்லை”.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் சென்னை மண்டலம் மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, " திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. பேரறிஞர் அண்ணா குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இந்த தைரியம் அவருக்கு எப்படி வந்தது?. அண்ணா குறித்து அண்ணாமலைக்கு என்ன தெரியும்?. அவரது பெயரைச் சொல்லவே அண்ணாமலைக்குத் தகுதி இல்லை.
நாம் இன்று சமமாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணமே அண்ணாதான். கடைநிலையில் இருப்பவர்கள் கூட இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் இதற்குக் பேரறிஞர் அண்ணாதான் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அனைத்து பத்திரிகைகளையும் ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதைப் போன்று ஒரே ஊடகம் மோடி ஊடகம் என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது வருகிறது பா.ஜ.க” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!