Tamilnadu
தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!
சென்னை அடுத்த புழல் மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லெனின் அன்பரசு. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்துத் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதாகக் கொளத்தூர் மாவட்ட துணை ஆணையர் சக்திவேலிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர்தான் தொல். திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டு வந்தது உறுதியானது. மேலும் இவர் மாதவரம் தெற்கு பகுதி நாம் தமிழர் கட்சி செயலாளராக உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து போலிஸார் பன்னீர் செல்வத்தைக் கைது செய்தனர். பின்னர் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!