Tamilnadu
மீண்டும் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. 2 தேதிகளில் பள்ளிகள் திறப்பு: முழு அப்டேட் இங்கே!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று மதுரை, கடலூர், சென்னை, திருநெல்வேலி, வேலூர், கரூர், தூத்துக்குடி, நாகை, உள்ளிட்ட 18 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பள்ளிகள் திறப்பு தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையை அடுத்து 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நலன் கருதி மூன்றாவது முறையாகப் பள்ளி திறப்பு தேதியில் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. முதலில் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு ஜூன் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஜூன் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இரண்டு தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு:அமைச்சர் சக்கரபாணி - முழுவிவரம் உள்ளே!
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை மோடியும், ஆர்.என்.ரவியும் படிக்க வேண்டும் ; முதலமைச்சர் அட்வைஸ்!
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!