Tamilnadu
மீண்டும் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. 2 தேதிகளில் பள்ளிகள் திறப்பு: முழு அப்டேட் இங்கே!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று மதுரை, கடலூர், சென்னை, திருநெல்வேலி, வேலூர், கரூர், தூத்துக்குடி, நாகை, உள்ளிட்ட 18 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பள்ளிகள் திறப்பு தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையை அடுத்து 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நலன் கருதி மூன்றாவது முறையாகப் பள்ளி திறப்பு தேதியில் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. முதலில் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு ஜூன் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஜூன் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இரண்டு தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!