Tamilnadu
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.39% தேர்ச்சி: முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள் எவை?
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதள முகவரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16% தேர்ச்சி. மாணவிகள் 94.66% தேர்ச்சி. அதேபோல் 1023 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம் (97.53% தேர்ச்சி). விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடம் (96.2% தேர்ச்சி).
ஆங்கிலத்தில் 89 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3649 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 3584 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மேலும் 9703 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 112 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!