Tamilnadu
போரூர் ஏரியில் தவறி விழுந்த முதியவர்.. மனித சங்கிலியாக மாறி மீட்ட 3 வாலிபர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை அடுத்துள்ள போரூர் ஏரியில் முத்து என்ற 60 வயது முதியவர் ஒருவர் தண்ணீர் குடிப்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளார். அப்போது அவர் தவறி ஏரியில் விழுந்துவிட்டார். பிறகு அவர் தன்னை காப்பாற்றும் படி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக மூன்று வாலிபர்கள் வந்துள்ளனர். முதியவர் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே அவரை மீட்க முயன்றனர்.
மூன்று வாலிபர்களும் ஒருவர் மாறி ஒருவர் கை கோர்த்துக் கொண்டு மனிதச் சங்கிலி போல் ஏரியின் தடுப்பில் சாய்ந்து கொண்டு முதியவர் கையை பிடித்து மேலகொண்டுவந்துள்ளனர். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் துணிச்சலுடன் முதியவரை மீட்ட மூன்று வாலிபர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், "நீங்கள் மட்டும் என்னைக் காப்பாற்றவில்லை என்றால் நான் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பேன்" எனக் கண்ணீர் மல்க வாலிபர்களுக்கு முதியவர் நன்றி தெரிவித்தது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.
Also Read
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!