Tamilnadu
புனித தளங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம்.. போலி வலைதளத்தை உருவாக்கி மோசடி: மக்களுக்கு சைபர் க்ரைம் எச்சரிக்கை!
இந்தியாவில் உள்ள புனித தளங்களுக்கு ஆண்டுதோறும் அதிகமான மக்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இப்படி புனித தளங்களுக்கு செல்பவர்களை குறிவைத்து ஹெலிகாப்டரின் அழைத்துச் செல்வதாகக் கூறி போலியான முன்பதிவு வலைதளங்கள் மூலம் பண மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்த வலைதளங்களில் ஹெலிகாப்டர் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் வாட் ஆப் எண்ணில் பணம் அனுப்பும் படி கூறிப்படுகிறது. பிறகு பணத்தை அனுப்பியவுடன் போலியான டிக்கெட் அனுப்பி பண மோசடி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக சைபர் க்ரைம் கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிக்கெட் பதிவு செய்யும் முன்பு அந்நிறுவனத்தின் உண்மைத்தன்மை விசாரித்துக் கொள்ள வேண்டும்.
மொபைலில் வங்கி விவரங்கள் மற்றும் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், வலைத்தள நிறுவனத்தின் குறியீடு மற்றும் முகவரியைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையற்ற லிங்குகள் மற்றும் மெயில்களை திறக்க வேண்டாம் எனவும் சைபர் தொடர்பான குற்றங்கள் நடக்கும் பட்சத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் மேலும் சைபர் தொடர்பான பாதுகாப்பு அறிவுரை சைபர் கிரைம் முகநூல் ட்விட்டர் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற போலியான வலைதளங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!