Tamilnadu
கடையில் இருந்த 35 இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்.. காரணம் கேட்டு போலிஸ் ஷாக்!
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னு பாண்டி மற்றும் பழனி குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி சந்தான குமார் என்பவர் இவர்களது கடையில் தவணை முறையில் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் வாகனம் வாங்கியதிலிருந்தே அடிக்கடி பழுதாகி வந்துள்ளது.
இதனால் சந்தான குமார் இது குறித்து பழனி குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து சந்தான குமார் இரண்டு மாதங்கள் தவணை கட்டியதோடு அடுத்த மாதம் நிறுத்தியுள்ளார்.
இது குறித்துக் கேட்டபோது வாகனத்தைச் சரிசெய்யவே அதிக செலவாகிவிட்டது. இதனால் தவணை கட்ட முடியாது என கூறியுள்ளார். இதற்கு பழனி குமார் தன்னிடமே வாகனத்தைச் சரி செய்து கொள்ளும்படியும், தவணையைக் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தான குமார், மதன்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு பழனி குமார் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். வீட்டின் கண்ணாடிகளை உடைத்து பழனி குமார் மற்றும் அவரது மனைவியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பழனி குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கடையிலிருந்த 35 இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக பழனி குமாருக்குத் தகவல் வந்துள்ளது. அவர் அங்குச் சென்று பார்த்தபோது கடையில் நிறுத்தி வைத்திருந்த 35 வாகனங்களும் எரிந்து சேதமடைந்துள்ளது.
இதையடுத்து பழனி குமார், சந்தான குமார் மற்றும் மதன்குமார் ஆகிய இருவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்துத் தலைமறைவாக உள்ள இருவரையும் போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!