Tamilnadu
TNPSC தேர்வில் முறைகேடு நடந்ததா?.. சட்டப்பேரவையில் அமைச்சர் PTR கூறிய விளக்கம் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் கூடியது.
பின்னர், பேரவையில் நேரமில்லா நேரத்தில் டி.என்.பி.எஸ்.பி குரூப் 4 மற்றும் தட்டச்சு தேர்வில் தேர்வு முடிவுகளில் குளறுபடி நடைபெற்றதாகச் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அ.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர், தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாகத் தவறாகத் தனியார் மையம் விளம்பரம் வைத்துள்ளது. மேலும் இந்த பயிற்சி மையம் பல மாவட்டங்களில் தேர்வு மையங்கள் வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட நிலையில், முதலமைச்சரின் ஆலோசனைப்படி தற்போது அரசு தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
7000 அரசு பணிகளுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். அதுவும் ஒரே நாளில் தேர்வு என்றால் பல்வேறு குளறுபடிகள் இருக்கச் செய்யும், இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள், குறிப்பாகத் தேர்வில் எழுதுவதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!