Tamilnadu

முதல் நாள் ரகளை.. மறுநாள் தற்கொலை முயற்சி.. 4-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் - நடந்தது என்ன ?

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு நேரத்தில் பெண்கள் சிலர் மதுபோதையில் தகராறு செய்துகொண்டிருந்தனர். மேலும் அவர்கள் சாலையை மறித்தும், வாகனங்களை மறித்தும் தகராறு செய்துகொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

இருப்பினும் தொடர்ந்து ரகளையில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். சுமார் 6 இளம்பெண்கள் இவ்வாறு தகராறு ஈடுபட்டுள்ளதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் ரகளையில் ஈடுபட்ட அந்த பெண்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனிடையே போலீஸ் வருவதை கண்ட பெண்களில் 3 பேர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடினர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டிருந்த மற்ற 3 மூன்று இளம்பெண்களை காவல்துறை கைது செய்தனர். அதோடு அவர்கள் அனைவர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது ரகளையில் ஈடுப்பட்ட அனைத்து பெண்களும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்காக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்களின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மதுபோதையில் நேற்று தகராறு செய்த இளம்பெண்களில் ஒருவர், இன்று தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண் சோனாலி. இவர் தனது காதலனுடன் மதுஅருந்தியபோது இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சோனாலி, 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள எண்ணியுள்ளார். அதன்படி இன்று மேலே இருந்து கீழே குதித்துள்ளார். சோனாலி விழுந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது கை, கால்கள், இடுப்பு முறிந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளம்பெண், மீண்டும் மதுபோதையில் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: நேருக்கு நேர் மோதிக்கொண்ட விறகு லாரி-ஆம்னி கார்.. அதிகாலையில் நிகழ்ந்த கோரத்தில் 6 பேருக்கு நேர்ந்த சோகம்