Tamilnadu
கோயில் நிலத்தில் வீடு கட்டியிருந்த BJP நிர்வாகி: இடித்து 23 ஆயிரத்து 800 சதுரடி நிலத்தை மீட்ட அதிகாரிகள்!
பா.ஜ.க கட்சியின் கோயில் மேம்பாட்டு ஆன்மீகப் பிரிவின் மாநில துணைத் தலைவராக இருப்பவர் சங்கர். இவர் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் அம்முனி அம்மன் கோபுரம் அருகே, கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருந்தது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வீட்டை காலி செய்யும் படி சங்கரிடம் பல முறை கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அவர் காலி செய்யவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் திருக்கோயில் அசையா சொத்து ஆக்கிரமிப்பு பிரிவின் கீழ், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து போலிஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டியிருந்த வீட்டை அதிகாரிகள் இடித்து மீட்டனர். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!