Tamilnadu
நகை களவு போனதாக புகார்.. திருடுன மாதிரி கனவு கண்டேன் என வடிவேலு பாணியில் பதிலளித்த தம்பதி !
சென்னை எம்.ஜி.ஆர் நகர் புகழேந்தி தெருவில் வசித்துவருபவர் சரவணன் (வயது 36). இவர் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தூண்டிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைத்து பீரோவில் இருந்த 130 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக சரவணன் எம் ஜி ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் வெளிப்பகுதியில் சோதனை நடத்திவிட்டு பீரோவை சோதனை செய்ய கதவை திறந்துள்ளனர். அப்போது அதன் உள்ளே நகைகள் இருந்துள்ளது.
இதனைக் கண்டு குழம்பிய போலிஸார் சரவணன் மற்றும் அவரின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, நேற்று இரவு கணவன் மனைவி தனி தனி அறையில் உறங்கிய நிலையில், நள்ளிரவில் வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டுள்ளது.
அதோடு காலையில் வீட்டின் பீரோ திறந்த நிலையில் இருந்ததால் திருடன் தான் வீட்டில் புகுந்து நகையை திருடிசென்றுவிட்டான் என நினைத்து அதனை சோதனை கூட செய்யாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது. இதன் பின்னர் போலிஸார் அந்த தம்பதிக்கு அறிவுரை கூறி காவல்நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!