Tamilnadu
சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி.. ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த போலிஸ் !
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், கோஷ்துர்க் போலிஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர், அபூபக்கர் பட்டிலாத்து (38). இவர் மீது கோஷ்துர்க் போலிஸ் நிலையத்தில், கடந்த ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ வழக்குப்பதிவாகியது.
இதை அடுத்து கேரளா போலிஸார், அபூபக்கர் பட்டிலாத்து மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த தீவிரமாக தேடினர். ஆனால் இவர் போலிஸிடம் சிக்காமல் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததோடு, வெளிநாட்டிற்கும் தப்பி சென்று விட்டார் என்ற தகவல் போலிஸூக்கு கிடைத்தது.
இதை அடுத்து கேரள மாநிலம், காசர்கோடு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு, அபூபக்கர் பட்டிலாத்துவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் எல்.ஓ.சி போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர். இதே விமானத்தில் கேரள மாநில போபோலிஸாரால், போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான, அபூபக்கர் பட்டிலாத்துவும் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார்.
குடியுரிமை அதிகாரிகள் அபூபக்கர் பட்டிலாத்து பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டரில் இவர் கேரள மாநில போலிஸால், போக்சோ வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று காட்டியது. இதை அடுத்த குடியுரிமை அதிகாரிகள் பயணி அபூபக்கர் பட்டிலாத்துவை வெளியில் விடாமல் மடக்கி பிடித்து, ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
அதோடு சென்னை விமான நிலைய போலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, கேரள பயணியை அடைத்து வைத்துள்ள அறைக்கு, போலிஸ் காவலும் ஏற்பாடு செய்தனர். மேலும் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டுக்கு, போச்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த, தலைமறைவு குற்றவாளி, மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார், இந்த தகவலையும் அவசரமாக அனுப்பினர்.
இதை எடுத்து காசர்கோடு மாவட்ட தனிப்படை போலிஸார், இன்று அதிகாலை, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, குடியுரிமை அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தலைமறைவு குற்றவாளி, அபூபக்கர் பட்டிலாத்துவை கைது செய்து, பலத்த பாதுகாப்புடன், கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!