Tamilnadu
அசாம் To சென்னை.. நாடுவானில் பறந்த விமானத்தில் அலறல் சத்தம் : திடீரென உயிரிழந்த பயணி!
அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று 134 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கவுகாத்தியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார்.
பிறகு விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்த சஜீத் அலிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அவருடன் பயணித்தசகோதரர் ராஜேஷ் அலி விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாகத் தகவல் கொடுத்து, விமானத்தில் பயணிக்கும் ஒரு பயணிக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே இந்த விமானத்தைத் தரை இருக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
பின்னர் முன் அனுமதி பெற்று விமானம் 20 நிமிடம் முன்னதாகவே சென்னையில் தரையிறங்கியது. அங்குத் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சஜீத் அலியைப் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதைக்கேட்டு உடன் வந்த அவரது சகோதரர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சஜீத் அலி ஏற்கனவே, கல்லீரல் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்ததும், மேல் சிகிச்சைக்காகக அவரது சகோதரருடன் விமானத்தில் வந்த போது உடல் நிலை பாதிப்படைந்து அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Also Read
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!
-
உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை தேவை! : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபா'வா - முரசொலி தாக்கு!
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?