Tamilnadu
AR.ரகுமான் ஃபிலிம் சிட்டியில் விபத்து.. படப்பிடிப்பின் போது கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி !
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர் கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.பிலிம் சிட்டி என்ற பெயரில் படப்பிடிப்பு தளம் உள்ளது. இங்கு பிரபல திரைப்படங்கள் இசையமைப்பது மற்றும் படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் அங்கு சில தினங்களாக நடிகர் சத்யராஜ் நடித்து வெளியாக உள்ள வெப்பன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக இன்று அதிகாலை படப்பிடிப்பிற்காக சுமார் 40 அடி உயரத்தில் சென்னை சாலிகிராமத்தைச் சார்ந்த குமார் 47 என்ற தொழிலாளி மின்விளக்குகளை அமைப்பதற்காக ஏறியுள்ளார்.
அப்போது அவர் மேலே ஏறுவதற்கான எவ்வித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் வேலை செய்து வரும் போது, அவரது கால் தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஃபிலிம் சிட்டியின் பணியாளர்கள் அவரை மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அவர் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள உயிரிழந்த குமார் என்பவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!