Tamilnadu
“உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா” : முதல்வருக்கு கடிதம் எழுதிய 3ம் வகுப்பு மாணவி!
தென்காசி மாவட்டம், வினைதீர்த்த நாடார்பட்டி பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி ஆரதான தனது பள்ளிக்கு உதவி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அப்பள்ளிக்கு தேவையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அதன்படி கடந்த 8ம் தேதி தென்காசியில் நடந்த அரசு நலத்திட்டவிழாவில் சிறுமி ஆராதனா பாராட்டி பேசினார். அப்போது விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், 3-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். பாருங்கள் ஒரு குழந்தை எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தை படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்தக் கடிதம் எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்தக் கூட்டத்தில் இப்போது நான் அறிவிக்கிறேன். அதற்கு முதற்கட்டமாக, 35 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்குக் கடிதம் எழுதிய அந்த குழந்தை ஆராதனா, அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று மீண்டும் அந்த சிறுமியை, அந்த குழந்தையை நான் வாழ்த்துகிறேன்..” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி ஆரதான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது மனுவை பெற்று உடனடியாக நடவடிக்ககை எடுத்து தனது பள்ளிக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். நீங்கள் கூறியது போல், இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாக ஆவேன் என மாணவி ஆரதான தனது வார்த்தைகளில் கூறியுள்ளார்.
மேலும், தனது பெற்றோர், ஊர் மக்கள், நண்பர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்றும் கூறியுள்ளார். பிஞ்சு குழந்தை அன்பினால் எழுதியுள்ள இக்கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஆராதானா எழுதிய கடித்ததில், “மனுவை ஏற்றுக்கொண்டு நான் அனுப்புன எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே பள்ளியில் படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு சொன்னீங்க ஐயா. நிச்சயம் அதே மதிரி நான் ஆவேன் ஐயா. அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும் ஐயா. எங்க அம்மா, அப்பா, ஊர் மக்கள் என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோச பட்டாங்க ஐயா. உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!