Tamilnadu
“டீலிங் நடக்கிறதா? - ஆன்லைன் சூதாட்ட நிறுவன நிர்வாகிகளை சந்தித்தது ஏன்?”: ஆளுநர் ரவிக்கு முத்தரசன் கேள்வி
நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தாலும், அதை மூடி மறைத்து குஜராத் வெற்றியை பெரிதுபடுத்தி காட்டப்படுகிறது.
பிரதமர் மோடி பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாகவும், ஆளுநர் ரவி மதச்சார்பின்மைக்கு எதிராகவும், இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் ஆன்லைன் சூதாட்ட அதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது புரியாத புதிராக உள்ளது என்றார்.
மேலும் யாரை வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது பெற வேண்டியதை பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? அல்லது கொடுக்க வேண்டியதை கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?